Posts

Showing posts from April, 2025

சாமந்தமலை -பெருங்கற்கால குத்துக்கல் Megalith - menhir

Image
இரும்புக்கால கலாச்சார மக்கள் இறந்தோரின் ஆவி அழிவதில்லை என்பதில் நம்பிக்கைக் கொண்டோராய் இருந்ததால் பெருங்கற்களைக் கொண்டு இறந்தோருக்கு நினைவுச் சின்னங்களை உருவாக்கினர். அச்சின்னங்களில் இறந்தோரின் ஆவி தங்குவதாக நம்பினர். கல் திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம், கற்குவை, குத்துக்கல் ஆகிய பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் உள்ளன. முதுமக்கள் தாழி மற்றும் சுடுமண் ஈமப்பேழை ஆகியவையும் மண்ணால் ஆனவையாய் இருந்தாலும், அவையும் இரும்புக் காலத்தில் இறந்த மக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதால் பெருங்கற்படைச் சின்னங்களாகவே கொள்ளப்படுகின்றன. பிற அனைத்து வகைகளும் ஆவணப்படுத்தப்பட்டு குத்துக்கல் வகை மட்டும் கிருஷ்ணகிரியில் இல்லாமல் இருந்த நிலையில் சாமந்தமலையில் அண்மையில் இக்குத்துக்கல் வகைக் கண்டறியப்பட்டது. எனவே இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் குத்துக்கல் என்னும் பெருமையைப் பெறுகிறது. குத்துக்கல் (Menhir) என்பது சுமார் 15 அடி உயரத்தில் அடி பெருத்து முனை சிறுத்து காணப்படும் கல்லாகும். இறந்தோரின் நினைவாக தற்போதும் இறந்தோர் புதைக்கப்பட்ட சவக்குழியின் தலைப்பகுதியில் ஒரு கல்லை நடும் வழக்கம்...

சின்னகொத்தூர் -சின்னகொத்தூர் கற்திட்டைகள் , கல்வட்டம் .2500 years old Dolmen & stone circle,

Image
https://jsrkrishnaji.blogspot.com/2025/04/blog-post_28.html வியக்கவைக்கும் தேவர்குற்தானி 200க்கும் மேற்பட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்தய கற்திட்டைகள் , பாறை ஓவியம். கல்வட்டம் , கோட்டைச்சுவர்,. 700 ஆண்டுகளுக்கு முந்தய இரு கோவில்கள் அத்தனையும் உங்களுக்காக போக முடியாவிட்டாலும் நமது வாழிவியலை பார்க்கலாம் https://youtu.be/WnOOu_q38wA நீங்கள் பார்காத கற்திட்டையினுள் ஒரு கற்திட்டை - தாயுக்கும் குழந்தைக்கும் ஒன்றினுள் ஒன்று - ஒருவேளை கர்பிணி இறந்து அவருக்க்காக இது எடுக்கப்பட்டு இருக்கலாம் களப்பயணத்தில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி https://youtu.be/2qarNj-rA9A 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய கற்திட்டை அழகிய குளம் அழகிய அல்லிப்பூக்கள் களப்பயணத்தில் அன்னை சந்தியா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி https://youtu.be/WnOOu_q38wA https://maps.app.goo.gl/KHYHXyxmKRheY5tY6 நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரி...

கெலமங்கலம் - பள்ளியின் பின் பக்கம் உள்ள நடுகல் தொகுதி 30 நடுகற்கள் மற்றும் கல்வெட்டு

Image
மேலும் படங்களுக்கு நடுகற்களின் படங்கள் https://jsrkrishnaji.blogspot.com/2019/06/30.html கல்வெட்டுகள் தமிழக கோவில்களின் கட்டிடக்கலையில் தூண் போதிகை போன்றவற்றின் தொடக்க நிலைப் பற்றி விளக்குகிறார் . அருங்காட்சியக காப்பாட்சியர் திரு. கோவிந்தராஜ் அவர்கள் அவருடன் ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார், கணேசன், ரவி, தமிழ்ச்செல்வன் இடம் கெலமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் https://youtu.be/ED316-jKRlA https://maps.app.goo.gl/awJtZCstNrG7VRzt6 நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற...

பெண்ணேஸ்வரமடம் - முன்றாம் குலோத்துங்கச்சோழன் கட்டிய கோவில் - மொத்த கல்வெட்டுகளுடன் .

Image
பெண்ணேஸ்வரமடம். தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரம் கம்பீரமாய் நிற்கின்றது பெண்ணை நாயனார் என்று கல்வெட்டுக்களில் அழைக்கப்பெறும் சிவன் கோயில். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் (பொ.ஆ.1207) இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர், போசாளர், விஜயநகரர் காலத்தில் 30 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை இந்த கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்களை பற்றி கூறுகின்றது. மூன்றாம் ராஜராஜனின் பட்டத்து அரசி கொடுத்த தானக் கல்வெட்டு புலிச்சின்னத்துடன் தொடங்குகிறது. தமிழகத்தில் இங்கு மற்றும் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே புலிச்சின்னம் கல்வெட்டுடன் உள்ளது. போசள மன்னன் வீரராமநாதன் காலத்து கல்வெட்டு ஒன்று பெண்ணையாண்டார்மடத்திலோ அல்லது இக்கோயிலுக்கு சொந்தமான தேவதான ஊர்களிலோ அதிகாரிகள் எவரேனும் சோறுவேண்டுதல் அல்லது எதேனுமொரு நலிவுகள் செய்தால் அவர்களது தலையை அறுத்துவிடவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. மேலும் சென்னையின் பழைய பெயரான மதராசபட்டணம் என்பதின் உண்மையான பெயரான மாதரசப்பட்டணம் என்னும் பெயர் கொண்ட பொ.ஆ.1369ல் பொறிக்கப்பட்ட விஜயநகரர் கால கல்வெட்டு இக் கோயிலை அடுத்த மலையில் உள்ள ஒரு பாறையில் காணப்படுக...